தமிழ் மறையாளர் வள்ளுவர்.
திருக்குறள் - அறத்துப்பால்
வடமொழியில் அறவழியை சொல்வது வேத, இதிஹாச, புராணங்கள். மனு நீதி சாஸ்திரங்கள்.
பொருள் பற்றிய சாஸ்திரம் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்.
காமவியல் பற்றிய சாஸ்திரம் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம்.
இவை அனைத்துமாக சேர பிடித்து சொல்லுகிற ஒரே தமிழ் நூல் திருக்குறள். இப்படிப்பட்ட திருக்குறளில்
அறத்துப்பாலோடு பொருட்பால், காமத்துப் பால் இரண்டும் சேர்ந்து இருந்தாலும் இது ஒரு அறநூல் என்றே போற்றப்படுகிறது . காரணம் பொருளிலும், காமத்திலும் அறமானவற்றையே வலியுறுத்துவதால்.
அதில் அறத்துப்பால் பற்றி சிறிது ஆராய்வோம் :-
மனு பகவான் வர்ணங்களை குறிப்பிடும்போது செய்கிற தொழிலின் அடிப்படையில் பிரம்ம, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரன் என்றும், ஆஸ்ரமங்களை கற்பது, வாழ்வது, ஓய்வது, உதறுவது என்கிற அடிப்படையில் பிரம்மச்சரிய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாசம் என்று நாலு நாலாகப் பிரித்து நீதிகளை சொன்னார். வள்ளுவர் அதனை இல்லறம் துறவறம் என்கிற இரண்டாக வகுத்துக் கொண்டார். காரணம்
இல்லறம் துறவறத்தில் சேர்ப்பது . இல்லறத்தில் இருந்தபடியே ஒவ்வொன்றாக விடப் பழகுவது வானப்ரஸ்தம். பிறகு முற்றாக விடுவது துறவறம். பிரம்மச்சர்யம் என்பது இல்லறத்தின் ஆயத்த நிலை. அதுபோல வானப்பிரஸ்தம் என்பது துறவறத்துக்கு ஆயத்த நிலை என்பதால் வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறவியல், துறவியல், ஊழ்வியல் என்று மூன்று பிரிவுகளைச் செய்தார். இதில் கற்கைக்குரிய ஆஸ்ரமம் ஆன பிரம்மச்சரியம் இல்லறத்திலும் , அடுத்த தலைமுறை தலை எடுத்த பின்பு, முந்தய தலைமுறை ஓய்வு கொள்ள விலகுதலாகிற வானப்ரஸ்தம், துறவிலும் அடங்கும் என்பதாக அவைகளை உள்ளடக்கிய இல்லறம், துறவறம் ஆகிய இரண்டுக்கு மேல் ஊழ் என்று கர்மத்தால் வினைபயன் சூழ்வதை உழ்வியல் பகுதியிலும் சொன்னார் .
ஊழ், விதி, தெய்வம் இவை எல்லாம் ஒருபொருள் கிளவிகள். அறத்தின் பயனாக விளைவது ஊழ். ஒருவன் முற்பிறவியில் செய்த அல்லது இந்த பிறவியிலே செய்த அறச் செயல்கள் தான் அவனுக்கு ஊழாக விளைகின்றன. ஊழின் பயனாக விளைவது பொருளும் , இன்பமும். எனவே இந்த ஊழ்வியல் , இல்லறம், துறவறம் இரண்டை அடுத்தும், பொருட்பால், காமத்துப் பாலுக்கு முன்பாகவும் நடுநாயகமாக அமைக்கப் படுகிறது. இந்த ஊழியலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது.
இல்லறத்தில், கணவன் மனைவி இருவரும் பேண வேண்டிய தர்மங்கள் அனைத்தையும் 25 அதிகாரங்களில் சொல்லி முடிக்கிறார் வள்ளுவர். அதன்படி வாழ்ந்தவன் எவரும் கெட்டதும் இல்லை . வீழ்ந்ததாகவும் வரலாறு இல்லை. இல்லறத்துக்கு அடிப்படை அன்பு. துறவறத்துக்கு அடிப்படை அருளுடைமை.
இல்லறத்தில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமைகள் 11. அதனை நல்ல முறையில் செய்ய வேண்டி வள்ளுவன் காட்டும் படிக்கட்டு
நல்லமனைவி
மழலைச் செல்வம் -> தம் மக்களாகிற குழந்தை பால் அன்பு -> அந்த அன்பு விரிவடைகிற போது
விருந்து
நன்றி உடைமை
நடுவு நிலைமை -> சமூகத்தோடு தொடர்பு விளைந்து, அத்தாலே
அடக்கமுடைமை -> மன, மெய், மொழிகளால் விளைகிற குற்றங்கள் களைந்து சமுதாய நலம் பெருக
ஒப்புறவு , ஈகை -> அத்தால்
புகழ் = வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதான புகழ் விளையும் என்பதோடு வள்ளுவர் சொல்லுகிற இல்லறவியல் முடிகிறது.
அந்த வகையில் இல்லறத்தில் இருப்பவனுக்கு
முதல் பொறுப்பு - பிரம்மச்சாரி, வானப்ப்ரஸ்தன், துறவி ஆகிய மூவருக்கும் உணவளித்து காப்பாற்ற வேண்டுதலாகிற கடமை. பெறுபவர்களுக்கு இது உரிமையும் கூட.
அடுத்து துறந்தார் = கைவிடப்பட்டவர்கள்,
துவ்வாதார் = ஏழ்மையில் இருப்பவர்கள்,
இறந்தார் = அநாத பிரேத சம்ஸ்கார பொறுப்பு
ஆகிய மூன்று வர்க்கத்தினருக்கும் இல்வாழ்வான் என்பான் துணை. அதோடு
தென்புலத்தார் = பித்ரு கடன்
தெய்வம் = தேவ கடன்
விருந்து = அதிதி = நட்பால் அறிந்து வருபவர்கள் + தேசாந்திரியாக அறியாது வருபவர்கள் இவர்களையும் ஆதரிப்பது.
ஒக்கல் = தன்னை விட ஏழ்மையில் இருக்கிற உறவினர்களுக்கு செய்யும் உதவி.
தான் = தனக்குமாக பகிர்ந்து
இவைகளைச் செய்யும் போது பொய், களவு, சூது செய்து வருகிற பொருளைக் கொண்டு அல்லாமல் பழிக்கு அஞ்சி அறவழியில் ஈட்டிய பொருளைக் கொண்டு பகுத்து உண்ண வேண்டும் என்பது வள்ளுவர் முறைமை.
இவை அனைத்தும் ஆண் பாலில் வைத்துச் சொன்ன வள்ளுவன், பெண்களுக்கும் இரண்டு கடமைகளைச் சொன்னான். அவை
1. மனைத்தக்க மாண்பு.
2. வளத்தக்க வாழ்வு
என்றால் பெரியவர்கள் முதல், பிள்ளைகள், கணவன் அனைவருக்கும் சுவைபட சமைத்து, பரிமாறி, சுகித்து இருத்தல். கணவன் செய்ய வேண்டிய தர்மங்களில் தூண்டுபவளாகவும், துணைபோகிறவளாகவும் , புக்ககம், பிறந்தகம் ஆகிய இருவீட்டார் களின் பெருமைகளை பேணி, பாதுகாப்பவளாகவும் இல்லற வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் பெண்..
அதுவும் கணவன் ஈட்டிய பொருள் பெருமதிக்குள் குடும்பத்தை நடத்தி சேமிப்பது சிக்கனமாய் வாழ வேண்டும் என்பதை .
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சார்ந்த
சொற்காத்து சோர்விலாள் பெண்.
என்பதாக , தன் கண்ணியத்தோடு, கணவனுடைய கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு இல்லாளுக்கு இருப்பதால் ஆண்களைவிட, பெண்ணின் பெருமையே திருவள்ளுவர் உயர நோக்குகிறார்.
துறவியல் = விரதம், ஜ்ஞானம் என்று இரண்டு கூறுகளாக பேசப்படுகிறது. இல்லறத்துக்கு அன்பு போல, துறவறத்துக்கு
அருளுடைமை அடிப்படை. அதுவிளைய
புலனடக்கம் -> ஐம்பொறிகளையும், மனதையும் கட்டுக்குள் கொண்டு வர விரதங்கள். புலன்களை அடக்கினால்
நிலையாமை
துறவு
மெய்யுணர்வு
அவா அறுத்தல்
விதி என்றால் என்ன? நாம் செய்கின்ற செயலுக்கு சமமானதும், எதிரானதுமான வினை நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கைக்கு கலந்த சமயம் சார்ந்த விஷயம். Every force has an equal and opposite reaction - This is Science.
வினையின் பயன் அப்போதைக்கு அப்போதே விளைவதில்லை. அது பக்குவப்படும் போது தான் நம்மை வந்து சேரும்.
எதைப்போல என்றால் கீரை, தென்னை இரண்டையும் ஒரே சமயத்தில் விதைத்தாலும் இரண்டும் ஒரே காலத்தில் முளை விடுவதில்லை. கீரை ஓரிருநாளிலும், தென்னை சில மாதங்கள் கழித்தும் முளைப்பது போல காலாந்தரங்களில் இந்த விதியை நமக்கு கூட்டுவது இறை செயல்.
பிரளய ஆதியிலே அஸத் கல்பமாக சூக்ஷும அவஸ்தையில் தன்னுடைய சரீரத்தோடு ஒட்டிக் கிடக்கிற பிரகிருதி-ஜீவ சமஷ்டியின் ஒட்டு விடுவித்து - ஸ்தூல அவஸ்தைக்கு - மூல பிரக்ருதியை 24 தத்துவங்களாக (பஞ்சீகரண முறையில்) பெருக்கி , ஆத்மாவை அவரவர்கள் கர்ம வினைக்கு சேர ஒரு சரீரத்திலே புகுத்தி தான் உள்ளுறைதலாகிற (அந்தப்பிரவிஸ்ய நியமன) காரியத்தை இறைவன்தான் செய்கிறான் . இந்த வினைகள் அநாதியான படியால் அவை ஒரு ஜென்மத்தில் முடிபவை அல்ல. அப்படிப்பட்ட பாவ-புண்ணிய சுமைகளில் ஒரு பகுதியை எடுத்து அதற்கு ஏற்ப தனு , மன, ஸ்தான, போகங்களை விதிவத்தாக அவரவர்களுக்கு சேர்ப்பிக் கிறான். இதனை - ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று தான் நேர்முகமாக சிலவற்றையும், வியஷ்டி ஸ்ருஷ்டி என்று தன்னால் படைக்கப் பட்ட பிறப்புக் கடவுளான பிராமனைக் கொண்டும் செய்கிறான். இப்படி கிடைக்கிற ஜென்மம் பிராரப்த (பயன் கொடுக்க தொடங்கிய) கர்மத்தால் வருவது. செலவு போக மீதம் உள்ள கர்மாக்கள் சஞ்சிதம் என்று மூட்டையாக இறைவனுடைய நினைவில் நிற்கும். அத்தோடு நடக்கிற பிறவியில் செய்த வினைகள் செலவு போக கூடிக்கொண்டு போகும்.
மன, மொழி, காயங்களால் செய்த நல்வினை -தீவினை இரண்டும், உடலால் செய்தவை உடலுக்கும், மொழியால் செய்தவை வாக்கின் வழியும் , மனதால் செய்தவை கனவிலும் எதிர்வினையை விளைத்துக் கழியும் என்பது நியதி. விதி என்பது அனுபவத்துக்கு வர வர அதன் பாரம் குறைந்து கொண்டே போகும். ஆக, அவை அனுபவித்தே அற வேண்டும்.என்றாலும் உலகில் துருவன், ஹனுமான், மார்க்கண்டேயன் என்று சிரஞ்ஜீவிகள் பலரைச் சொல்லுகிறோமே, அவர்கள் விதியை வென்றவர்கள் ஆகிறார்களே ? அப்படி பகவத் பிரசாதத்தாலே வினைகள் களைய முடியும் என்றால் விதியை வெல்ல முடியும் தானே ? என்றால்
ஆசை, கோபம், பந்தம், பாசம், என்று உலக இயலில் இருப்பவர்கள் விதியை வெல்ல முயற்சித்தாலும் இயலாது. உற்ற சமயத்தில் ஊழ் வந்து உறுத்தும். ஆனால் இறைவழிபாட்டால், இறை அருளால் அதனை லகுவாக்கலாம் என்பதே நம்முடைய மதம் சார்ந்த வாழ்வியல். இதுவே திருக்குறள் காட்டுகிற அறத்துப்பால் கருத்து. நம்புங்கள் நாராயணனை, நலம் பெறுவீர்.
சமஸ்கிருத பாஷைக்கு அப்பெயர் வரக்காரணம் அது இலக்கிய இலக்கணங்களால் நன்கு வரையறுக்கப்படதோடு மட்டுமல்லாமல் நிருக்தம் என்கிற Etymology ஆல் origin of words and it’s root word கொண்டு விளக்கும் வகை அமைந்துள்ள படியால்.
சமஸ்கிருதம் போலே எல்லா தமிழ் சொற்களுக்கும் etymology கூறமுடியாது. இதில் பல இரவல் சொற்களும் உண்டு. அந்த வகையில் தமிழ் மொழிக்கு அப்பெயர் வரக்காரணம்
த + இழ் (=இழியாத)
த = கொடுத்தல், ஈதல் என்கிற பொருளில் தமிழ் பல திராவிட மொழிகளைக் ஈந்துள்ளது.
தமிழ் = மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகளை ஈந்தும் தம்மில் இழியாது தனித்து விளங்குவதால் தமிழ் என்றாயித்து என்று காரணப்பெயராக இதனைச் சொல்லுவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எப்படி உலக படைப்புக்களக்கு
ஆதி பகவன் = அகார வாச்யனான விஷ்ணு காரணமோ, அதுபோல ஸப்த ராசிகளின் ஜனகன் அகாரம் என்பது வள்ளுவர் வாக்கு.
பகவன் = விரிஞ்சி. வியஷ்டி ஸ்ருஷ்டி கர்த்தா.
ஆதி பகவன் = விரிஞ்சி கர்த்தா. ஸமஷ்டி ஸ்ருஷ்டி கர்த்தா.
அ = அகாரார்த்தோ விஷ்ணுஹு ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளய கிருது (பட்டர்).
அ உயிரெழுத்துக்களில் முதல் எழுத்து.
க = க இதி பிரம்மா.
விஷ்ணுவை அந்தரயாமியாக க் கொண்டு பிரம்ம ஸருஷ்டி போலே
க் + அ = க உயிர் மெய்யெழுத்துக்களின் பிரவர்தனம். எனவே திழிழ் நாராயணனிடம் இருந்து பிறந்தது.
சமஸ்கிருத எழுத்துக்கள் ருத்ரனின் டமருவில் இருந்து பிறந்தது என்பதால் ஆதி சொல்லக் கூடும். அந்த சிவனும் பிரமனின் படைப்பே என்பதால் தமிழ் அதற்கும் முற்பட அநாதி.
ஆதி = Eve
பகவன் = Adam
என்று சொல்வாரும் உண்டு.
இவர்கள் பகவானின் இச்சா சக்தி (ஞானம்) மற்றும் க்ரியா சக்தி (பிரயத்தனம்) எனலாம். அது பகவானும் பிராட்டியுமே அன்றோ?
தமிழ் = மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகளை ஈந்தும் தம்மில் இழியாது தனித்து விளங்குவதால் தமிழ் என்றாயித்து என்று காரணப்பெயராக இதனைச் சொல்லுவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எப்படி உலக படைப்புக்களக்கு
ஆதி பகவன் = அகார வாச்யனான விஷ்ணு காரணமோ, அதுபோல ஸப்த ராசிகளின் ஜனகன் அகாரம் என்பது வள்ளுவர் வாக்கு.
பகவன் = விரிஞ்சி. வியஷ்டி ஸ்ருஷ்டி கர்த்தா.
ஆதி பகவன் = விரிஞ்சி கர்த்தா. ஸமஷ்டி ஸ்ருஷ்டி கர்த்தா.
அ = அகாரார்த்தோ விஷ்ணுஹு ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளய கிருது (பட்டர்).
அ உயிரெழுத்துக்களில் முதல் எழுத்து.
க = க இதி பிரம்மா.
விஷ்ணுவை அந்தரயாமியாக க் கொண்டு பிரம்ம ஸருஷ்டி போலே
க் + அ = க உயிர் மெய்யெழுத்துக்களின் பிரவர்தனம். எனவே திழிழ் நாராயணனிடம் இருந்து பிறந்தது.
சமஸ்கிருத எழுத்துக்கள் ருத்ரனின் டமருவில் இருந்து பிறந்தது என்பதால் ஆதி சொல்லக் கூடும். அந்த சிவனும் பிரமனின் படைப்பே என்பதால் தமிழ் அதற்கும் முற்பட அநாதி.
ஆதி = Eve
பகவன் = Adam
என்று சொல்வாரும் உண்டு.
இவர்கள் பகவானின் இச்சா சக்தி (ஞானம்) மற்றும் க்ரியா சக்தி (பிரயத்தனம்) எனலாம். அது பகவானும் பிராட்டியுமே அன்றோ?
கோல் தேடி ஓடும் கொழுந்ததேபோல்
மால் தேடி ஓடும் மனம்
என்பதற்குச் சேர மனிதன் பிறக்கும்போதே உண்டாவது இறை உணர்வு. அந்த இறை உணர்வு பூர்ணத்வம் பெற , தான் பிறப்பதற்கு காரணமான
1. முழுமுதற் கடவுளை (ஆதிபகவன் அவனை) முதல் குறளுக்கு விஷயமாக்குகிறார் வள்ளுவர். இதன் விரிவாக்கம் மேலே காணலாம் .
2. தூய அறிவு கொண்டு ஓவுதலே மெய்ஞானம். தத்வ ஞானாது மோக்ஷலாபம். அந்யாது ஸம்ஸாரம் என்கிற வேத நெறியாளர் வழக்கை இரண்டாவது குறள் பேசுகிறது.
3. அந்த அறிவின் பயன் வீடு பெற்று நீடு வாழ்வது. இது 3வது குறளுக்குப் பொருள்.
4. அந்த நிலையில் பசி, பிணி, மூப்பு ஆகிற இடும்பை கூறுலகத்திநின்றும் விமுக்தி என்கிறது குறள் நான்கு.
5. ''வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து '' என்கிறபடி ''அவாகி, அநாதர : '' என்றும் வைஷம்ய, நைர்கிருண்யாதி பாரபாக்ஷம் அற்றவனான இறையை, இருள்சேர் இருவினையம் சேரா உலகமான பரமபதத்தில் சென்று வாழ்த்தி மகிழ்வதே வீடு பேறு என்கிறது குறள் ஐந்து.
6. ஆக, இறைவனை நினைத்தல், வாழ்த்தல், அவன்நெறி நிற்றல் இவை செய்வார் , பொய்யில் மெய்வாழ்க்கையாகிற - மறுபடி பிறத்தலில்லா- மேல்வீட்டின்கண் நிலையாக நீடு வாழ்வார் என்கிறது 6 வது குறள் .
7. அஃதிலார் , காம, வெகுளி மயக்குளாகிற துன்பக் கடலுக்கு ஹேதுவாகிரா பிறவிக்கடலில் அழுந்துவர் என்று அன்வய முகேண 7 வது குறளிலும்
8. இதையே எதிர்மறையாக - வியதிரேகத்தில் - கருத்தாளுமை தோற்ற, அறத்தின்பால் அலாத பொருள், இன்பம் இவைமேல் கண்வைப்பார்க்கு பிறவிக்கடல் நீந்துதல் அரிதாம் என்கிறது குறள் எட்டு.
9. முக்கரணங்களைப் படைத்த இறைவனை நினைத்தல், வாழ்த்தல், வணங்கல் அதுசெய்யார் தலையால், கண், செவி, நாக்கால் என்ன பயனும் இல. ''பூர்வ மேவ கிருதா பிரம்ஹன்னு ஹஸ்த பாதாதி சம்யுதம் , ஈஸ்வராய நிவேதித்தும்'' என்கிற வடமொழி வாசகத்தின் திரண்ட கருத்தை - கூறவதே 9 வது குறள் .
இப்படி, வள்ளுவர் மோக்ஷ சாதனமாக குறிப்பிடுவது, சரண்யனு டைய திருவடிகளையே என்பது இங்கு தெளிவான பதிவு. இதனையே ஸ்வாமி பிள்ளைலோகாவிகாரியர் என்கிற வைஷ்ணவ ஆசிரியரும் ''ஸ்தனந்தய பிரஜையானது மாதாவின் எல்லா அவயவங்களும் இருக்க, அவள் முலையிலே வாய் வைக்குமா போலே'' என்கிறார்.
K S Srinivasan
இவை பத்தும் 'பிறவி நோய் அறுக்குமே' என்கிற வகையில் பாடப்பெற்ற ''கடவுள் வாழ்த்துப்'' பகுதியைக் கொண்டு, வள்ளுவர் வை ஷ்ணவ கோட்பாடுகளையே கொண்டிருந்தார் என்று உறுதியாகவே கூறலாம். இதை மேலும் விவரிப்போமாக :-
இவர் இறைவனை ''ஆதி பகவன்'', ''வாலறிவன்'', ''அறவாழி அந்தணன்'' என்பதால் முண்டிகள் தங்களுடைய கடவுளான ''புத்தனைத்தான் '' பேசுகிறார் என்பர்.
''மலர்மிசை ஏகினான்'' என்பதைக் கொண்டு சமணர்கள் தங்களுடைய கடவுளான ''அருகனைத்தா ன்'' குறிப்பிடுகிறார் வள்ளுவர் என்பர்.
உண்மையில் அவர் வைதிக நெறியைச் சார்ந்தவர் என்பதிலேயே பொருள் உள்ளது. காரணம் :
அவர் தாள், அடி, நற்றாள் , மாணடி என்று உருவ வழிபாட்டு கடவுளரையே பாடி உள்ளார். இந்த வழிபாட்டு முறை மேற்சொன்ன மதங்களில் இல்லை யாதலால் இங்கு அவர்களுடையதான சூன்யவாதம், மாயாவாதம், நிரீஸ்வர சாங்கிய வாதம் அத்தனையும் மறுக்கப் பட்டதாகவே தேறுகிறது . மேலும்
''வேண்டுதல் வேண்டாமை இலான்'' (அவாப்த சமஸ்த்த காமத்வம்)
''இருவினையும் சேரா இறைவன்'' (கர்ம-பல அசம்ஸ்பிருஷ்டன், ஹேய குண பிரதிபடன்)
''பொறிவாழ்வில் ஐந்தவித்தான்'' (ஹ்ருஷீக ஈசன்)
''தனக்குவமை இலாதான்'' (அப்ரதிம பிரபாவன்)
''அறவாழி அந்தணன்'' (விக்ரஹவான் தர்ம:, வேத நான்கும் முன்போதிய பட்டன்)
''எண்குணத்தான்'' (அஷ்டகுண ஸம்பன்னன்)
என்பதான பிரபாவங்களை உடைய வைதிக மத முழுமுதற் கடவுளான நாராயணனே இங்கு விவக்ஷிதம்.
என்பதான பிரபாவங்களை உடைய வைதிக மத முழுமுதற் கடவுளான நாராயணனே இங்கு விவக்ஷிதம்.
நாரஸ்ய அயனம், நாராணாம் அயனம் என்கிற வியுத்பத்தியின் படி உள்ளும் புறமும் இருந்து ஆட்சி செய்வதால் நாராயணனே இறை (ஆளுமை உடையவன் ) என்பதான பிரஹ்ம விவர்தன வாதத்தை ஏற்குமுகமாக வள்ளுவரும் ''இறைவனை'' க் கொண்டு இந்த அதிகாரத்தை முடித்திருப் பதால், குணபூர்த்தி உள்ள பிரமத்தையே வழிபாட்டுக்கு குறிய தெய்வமாக அவர் அனுமோதிக்கிறார் என்பதும் புலனாகிறது.
தவிர முதல் குறளில் உள்ள
''பகவன்'' என்பது 'பகவான்' என்றவடமொழி சொல்லின் குறைப்பாகும். உலகம் அருவம் (சூக்ஷுமம்) உருவம் (ஸ்தூலம்) என பலவாய் , உயிர்கள் ஆண், பெண் என்றும், நடப்பன, ஊர்வன, மிதப்பன, பறப்பன எனவாய் இறைவன் தானே - பகுஸ்யாம் பிரஜா யே இதி-என்று வேதத்தில் ஓதின படி- பலவாதலால் அவருடைய 'பகவன்' என்பதும் காரணப் பெயரால் வந்தது எனலாம் . இது ஸ்ரீ வைஷ்ணவ ஸத்கார்ய வாதத்தை ஏற்றுச் சொன்ன ஒன்றாகும்.
இதனால், இறைவன் என்கிற காரணி இன்றி , பரிணாம வளர்ச்சியால் உலகம் உண்டாகிறது என்கிற வைசேஷிக மதமாகிற ''அணுப்பரிணாம வாதம்'' மறுக்கப் பட்டது என்று கூறலாம்.
வடமொழியில் பகவான் என்பவன் ஞான, பல, ஐஸ்வர்ய, வீர்ய, சக்தி, தேஜ: என்கிற ஷாட்குண ஸம்பன்னனாக அறியப்படுகிறான். இதை தமிழில் ஓதி, செல்வம், மறம், புகழ், திரு, அவாவின்மை என்று கூறுவதுண்டு. இப்படிப் பட்ட குண விசிஷ்ட பிரமத்தையே வள்ளுவர் ''பகவன்'' என்று பேசியுள்ள படியால், நிர்குண, நிராகார பிரஹ்ம வாதிகளான ''மாயா'' வாதத்தை திரஸ்கரித்த படியையும் காட்டுகிறது.
படைத்தல், காத்தல், கரத்தல் ஆகிய மும்மூர்த்திகளையும் பகவான் என்பது போக, பகவன் என்று பௌத்த கடவுளாகவும், அருகன் என்று ஜைனமதக் கடவுளாகவும் வழக்கில் உள்ளபடியால், அவர்களை வியாவர்த்திக்க வேண்டி ''ஆதிபகவன்'' என்று விசேஷணத் தோடே குறிப்பிடுகிறார் தம்முடைய '' முழுமுதற் கடவுளான '' பகவானை வள்ளுவர்.
''அகாரார்த்தோ விஷ்ணுஹு'' என்கிற வடமொழி வசனத்தை அடியொற்றி ''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்று'' என்கிறார் இவரும். உபமானம், உபமேயம் இரண்டிலும் இந்த ''ஆதி'' சப்தத்தை அன்வயித்து பொருள் கொள்ள வேண்டும்படியாய் வள்ளுவர் தம்முடைய முதல் குறளை அமைத்தது நோக்கத் தக்கது.
அகரம் சப்த ராசிகளுக்குள் ஆதி என்று வைத்து பார்க்கும்போது ''முதல்'' என்ற பொருளிலும் , மெய் எழுத்துக்களுக்கு காரணியாக இருப்பதையும் கொண்டு.
ஆதி+பகவன் என்று பார்க்கும் போது ஜகத் காரணத்வத்வம் மட்டுமல்லாது , புத்த, சமணக் கடவுளரான தேவதாந்தரங்களை வியாவர்த்திப் பதிலே அவருக்கு முக்கிய நோக்கு என்று சொல்லலாம்.
''அகாரார்த்தோ விஷ்ணுஹு'' என்கிற வடமொழி வசனத்தை அடியொற்றி ''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்று'' என்கிறார் இவரும். உபமானம், உபமேயம் இரண்டிலும் இந்த ''ஆதி'' சப்தத்தை அன்வயித்து பொருள் கொள்ள வேண்டும்படியாய் வள்ளுவர் தம்முடைய முதல் குறளை அமைத்தது நோக்கத் தக்கது.
அகரம் சப்த ராசிகளுக்குள் ஆதி என்று வைத்து பார்க்கும்போது ''முதல்'' என்ற பொருளிலும் , மெய் எழுத்துக்களுக்கு காரணியாக இருப்பதையும் கொண்டு.
ஆதி+பகவன் என்று பார்க்கும் போது ஜகத் காரணத்வத்வம் மட்டுமல்லாது , புத்த, சமணக் கடவுளரான தேவதாந்தரங்களை வியாவர்த்திப் பதிலே அவருக்கு முக்கிய நோக்கு என்று சொல்லலாம்.
எப்படி ம்ருக்பிண்டம் கடமாய் இருந்தாலும், கபாலமாய் இருந்தாலும், உடைந்து சூர்ணமானாலும் - கார்யாவஸ்த்தையில் அது வேறுபட்டாலும் - காரண அவஸ்தையில் அவை மண் என்றே இருக்குமா போலே, ஸ்ருட்டித்த ஜகத்துக்கு ஆதி (காரணம்) பகவான். ஸ்ப்த ராசிகளுக்கு ஆதி (முதல்) அகாரம். அத்தால் சப்தங்களுக்கு ஆதியான அகாரத்தால் சொல்லப்படும் பகவான்-விஷ்ணு- பிரக்கிருதி , ப்ராகிருத்தங்களுக்கு காரண பூதன் என்கிற ஸத்காரண வாதத்தை முன்னிலைப் படுத்துகிற வள்ளுவரை வைஷ்ணவர் என்பதில் என்ன குறை?
இறைவன் அடியே துணையாய் துறைசேர்
மறையின் பொருளாம் குறள்!
இவையே வள்ளுவரின் கடவுள் கொள்கை .
எனவே அவர் வைதிக மரபில் - சனாதன பரம்பரையில் - வந்தவர் , சமணரோ, பௌத்தரோ அல்லர் என்பதைச் சொல்லி,
எப்படி கர்ம, ஞான, பக்தி யோகங்களை பரக்கப் பேசி, பின் அவைகளைக் கழித்து சரணாகதி சாஸ்திரத்தை சரம ஸ்லோகத்திலே கீதாச்சாரியன் கௌரவித்தானோ, அதுபோல அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என்று 1320 குறள்களில் விசத்தமாக லௌகீக விஷயங்கள் பேசினாலும், கடவுள் வாழ்த்து 10 பாடல்களால், சரணாகதியே மோக்ஷ சாதனமாக சிலாகித்த திருக்குறளை ஸ்ரீவைஷ்ணவ நீதி நூலாக ஏற்பதில் குறை ஒன்றும் வாராது.
--கி ஸ்ரீர ஸ்ரீ .
எனவே அவர் வைதிக மரபில் - சனாதன பரம்பரையில் - வந்தவர் , சமணரோ, பௌத்தரோ அல்லர் என்பதைச் சொல்லி,
எப்படி கர்ம, ஞான, பக்தி யோகங்களை பரக்கப் பேசி, பின் அவைகளைக் கழித்து சரணாகதி சாஸ்திரத்தை சரம ஸ்லோகத்திலே கீதாச்சாரியன் கௌரவித்தானோ, அதுபோல அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என்று 1320 குறள்களில் விசத்தமாக லௌகீக விஷயங்கள் பேசினாலும், கடவுள் வாழ்த்து 10 பாடல்களால், சரணாகதியே மோக்ஷ சாதனமாக சிலாகித்த திருக்குறளை ஸ்ரீவைஷ்ணவ நீதி நூலாக ஏற்பதில் குறை ஒன்றும் வாராது.
--கி ஸ்ரீர ஸ்ரீ .
K S Srinivasan
---------- Forwarded message ---------
From: Thiruvonum's Weblog <comment-reply@wordpress.com>
Date: Wed, 29 Dec 2021 at 16:59
Subject: [New post] ஸ்ரீ திருக்குறளும் ஸநாதன தர்மமும் –ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் —
To: <kairavini@gmail.com>
From: Thiruvonum's Weblog <comment-reply@wordpress.com>
Date: Wed, 29 Dec 2021 at 16:59
Subject: [New post] ஸ்ரீ திருக்குறளும் ஸநாதன தர்மமும் –ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் —
To: <kairavini@gmail.com>
|